அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Jacto Geo Conference 2022 | ஜாக்டோ ஜியோ மாநாடு ஆசிரியர்கள் விபத்தில் சிக்கினர்  

Jacto Geo Conference 2022 | ஜாக்டோ ஜியோ மாநாடு ஆசிரியர்கள் விபத்தில் சிக்கினர்  

Jacto Geo Conference 2022

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மாநாடு சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம் நடந்தது. ஆசிரியர்கள் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி, மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆம்னி பேருந்துகள் மூலமாக சென்னை தீவுத்திடலுக்கு வந்தனர். தமிழக முதல்வர், பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் பங்கேற்று மாநாட்டில் பேசினர்.

Also Read: ஜாக்டோ ஜியோ மாநாடு எந்த பயனிமில்லை

மாநாடு இரவு முடிந்த நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த 17 ஆசிரியர்கள் ஞாயிறன்று வேன் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வாகனம் பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னே சென்று கொண்டிருந்த லாரியின் மீது அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தின்போது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த 11 ஆசிரியர்கள் விபத்தில் சிக்கினர். அதிர்ஷடவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை, சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

ஆசிரியர்கள் விவரம், முனியான்டி (44), மாயகிருஷ்ணன் (54), முருகேசன்(56), தாமரை செல்வி (43), ஆதிமுருகன் (48), முத்துசாமி (54), வேலு (57), சுந்தரராஜ் (49), முத்துலட்சுமி (57), பெரிய கருப்பன் (56), அவ்வையார் (49) உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Posts