அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Thursday, June 26, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

முதன்மை கல்வி அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிமாறுதலாகி பெற்று, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த பிப்ரவரி மாதம் பொறுப்பு ஏற்றுக்கொண்டு பணியாற்ற தொடங்கினார்.

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறும்போது,

இவர் தனியார் பள்ளியிடம் உரிமம் புதுப்பிக்க ரூ. ஒரு லட்சம் வரை லஞ்சமாக கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டதின் பேரில், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை முதன்மை கல்வி அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர், ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் சோதனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, முதன்மை கல்வி அலுவலரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத ரூ. ஒரு லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து விடிய, விடிய சோதனை செய்து வந்தனர். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் அவரது உதவியாளர் பாலன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Latest Posts