அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Part time teacher salary hike delay | பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயர்வு இழுத்தடிப்பு

Part time teacher salary hike delay | பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயர்வு இழுத்தடிப்பு

Part time teacher salary hike delay

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கல்வி அமைச்சரால் அறிவித்த அரசாணை வெளியிடாமல் இழுத்தடிப்பு-மாநில திட்ட இயக்குனருக்கு கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 2012 மார்ச் மாதம் 16549 பேர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 6190 பேர் ராஜினாமா செய்து விட்டனர் எனவும் தற்போது 10359 பேர் மட்டுமே பகுதி நேர ஆசிரியராக பணி செய்வதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் புள்ளி விவரம் வெளியிட்டு 10000 ஊதியம் தற்போது பெற்று வரும் இவர்களுக்கு 2500 ரூபாய் ஊதிய உயர்வு தருவதாகவும், அதனுடன் சேர்ந்து பத்து லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு தருவதாகவும் அரசு தீர்மானம் செய்துள்ளதாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கடந்த அக்டோபர் 4 ம் தேதி கல்வி அமைச்சர் வெளியிட்டார்.

பணி நிரந்தரம் கேட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு கிடைத்ததே என நினைத்த நிலையில் கல்வி அமைச்சர் அறிவிப்பு வெற்று அறிவிப்பாகி விட்டது என ஏமாற்றம் அடைந்தனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரால் ஊதிய உயர்வு செயல்முறைகள் வெளியிட வேண்டும்.

மாநில திட்ட இயக்குனர் பகுதி நேர ஆசிரியர்களுக்காக கல்வி அமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வு கண்டு கொள்ளவில்லை என கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றம் சாட்டுகிறது.

கல்வி அமைச்சர் ஊதிய உயர்வு அறிவித்து 50 நாட்கள் கடந்து விட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசாணை வெளியிட வேண்டும் என கலல ஆசிரியர்கள் நலச்சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறி உள்ளார்.

Related Articles

Latest Posts