25 C
Tamil Nadu
Tuesday, July 15, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

தாய், தந்தை இழந்த இரு குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக்கொண்ட திமுக அமைச்சர்

தாராபுரம் அருகே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த ஓட்டுநரின் மகன்களின் படிப்பு செலவுகளை ஏற்பதாக அறிவித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சந்தித்து நிவாரண உதவி வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். வாடகை கார் ஓட்டுநரான இவருக்க கார்த்திகா என்ற மனைவியும், தரணிஷ், ரித்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்திகா ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்ட நிலையில் தந்தை செந்தில்குமாரின் பராமரிப்பில் குழந்தைகள் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக செந்தில்குமார் இறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில் இவர்களது தாய் வழி பாட்டி தேவியின் ஆதரவில் சிறுவர்கள் தற்போது உள்ளனர்.
வயது மூப்பு காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியாமல் பாட்டி தவித்து வந்த நிலையில் இருந்தனர். இதையறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாதிக்கப்பட்ட சிறுவர்களை நேரில் சந்தித்து, தனது சொந்த செலவில் உதவித்தொகையை வழங்கி அந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர்.

IMG 20210618 WA0019


மேலும் தமிழக அரசின் நிவாரண உதவித்தொகை கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பதாக சிறுவர்களின் உறவினர்களிடம் உறுதியளித்தார் தொடர்ந்து சிறுவர்களின் தந்தை செந்தில்குமார் கொரோனா தோற்றால் உயிரிழந்தார் என்பதற்கான இறப்புச் சான்றிதழை உடனே வழங்க பெருந்துறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

Related Articles

Latest Posts